ஆப்நகரம்

30 அடி உயரத்தில் 5 ஆயிரம் குழந்தைகள்; கலெக்டர் துவங்கி வைத்த தேர்த்திருவிழா!

30 அடி உயரத்தில் 5 ஆயிரம் குழந்தைகள் தொங்கிய மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Samayam Tamil 8 May 2022, 9:08 pm
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
Samayam Tamil நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் தேர்
நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் தேர்


அந்தவகையில் இந்தாண்டு திருவிழா 1ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து இந்த கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பக்தர்கள் தங்களது குழந்தைகளை 30 அடி உயர செடில் மரத்தில் ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

கைது ஆகிறார் மன்னார்குடி ஜீயர்?; பரபரப்பு தகவல்கள்!

இந்த செடில் மரத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் சுற்றப்படுவதால் நாளை காலை வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளது. தொடர்ந்து நெல்லுககடைமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

இந்த தேரினை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் களதமன் ஆகிய தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வர நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.

பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சி; அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இதை போல் பக்தர்கள் மாவிளக்கு வைத்து படையலிட்டும், பால்காவடி, பன்னீர் காவடி, வேப்பில்லை காவடி மற்றும் பாடைக்காவடி உள்ளிட்ட பல்வேறு விதமான காவடிகளோடு நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயத்தில் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

அடுத்த செய்தி