ஆப்நகரம்

பிரதமர் மோடி நடவடிக்கை; மருத்துவ மாணவர்கள் ஹேப்பி!

பிரதமர் மோடி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையால் நாகை மாவட்டத்துக்கு நன்மை கிடைத்துள்ளது. இது, நாகை மாவட்ட மருத்துவ மாணவர்களின் கனவு நனவாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 12 Jan 2022, 5:59 pm
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 7ம் தேதி நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த ஒரத்தூர் கிராமத்தில் 366.85 கோடி ரூபாய் மதிப்பில், 60.4 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டது.
Samayam Tamil நாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரி
நாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரி


மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில் இந்த பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த மருத்துவக்கல்லூரியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

வட்டாட்சியர் தந்தை அடித்து கொலை; நேர்மைக்கு கிடைத்த பரிசு?

இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நாகை எம்பி செல்வராசு, நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், , நாகை எஸ்பி ஜவஹர், மருத்துவமனை முதல்வர் விஷ்வ நாதன் மற்றும் பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியை பின்பற்றி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி, மாணவ மாணவியர் தங்கும் விடுதி என மூன்று பெரிய கட்டிடங்கள் உட்பட நிர்வாக அலுவலகம், பிணவறை என மொத்தமாக 22 கட்டிடங்கள் அங்கு இடம் பெற்றுள்ளன.

யாருன்னு சொன்ன புதிய டிஐஜி; திகைத்துபோன போலீஸ்!

இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற் கூறியியல், உடலியங்கியியல், உயிர் வேதியியல் என மூன்று துறைகள் முதற்கட்டமாக துவங்க உள்ளது. மேலும், மருந்தியல், சமூக மருத்துவத்துறை, நுண்ணுயிரியல் துறை, நோயியல் துறை, தடயவியல் மருத்துவ துறை, என பல்வேறு துறைகள் எதிர்காலத்தில் வர உள்ளது.

மேலும் மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு முதல் 150 மாணவர்களை கொண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. மருத்துவ கல்லூரியில் 40 கணினிகளை கொண்டு இணையநூலம், புத்தக நூலகம், தேர்வரை, செய்முறை ஆய்வகம், என நவீன பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி