ஆப்நகரம்

ஆட்டைய போட்ட கடல் அட்டைகள்; சிக்கலில் வனத்துறை அதிகாரிகள்!

வனத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கடல் அட்டைகளை ஆட்டைய போட்ட அதிகாரிகள் சிக்கலில் மாட்டியுள்ளனர்.

Samayam Tamil 14 Apr 2022, 9:44 pm
நாகை வனத்துறையினர் கடந்த 2020ம் ஆண்டு அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தடைசெய்யப்பட்ட பொருளான 1060 கிலோ கடல் அட்டை கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
Samayam Tamil கடல் அட்டைகள்
கடல் அட்டைகள்


இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், நாகை மகாலட்சுமி நகரில் உள்ள வன உயிரின பாதுகாவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக 12 பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற நடவடிக்கைக்காக மீண்டும் கடல் அட்டை இருப்பு குறித்து வனசரகர் அனந்தீஸ்வரன் சோதனை செய்தார். அப்போது 1060 கிலோ கடல் அட்டையில் 400 கிலோ கடல் அட்டை மாயமானது தெரிய வந்தது.

இதுகுறித்து வனசரகர் அனந்தீஸ்வரர் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றிய நாகை காடம்பாடி பகுதியை சேர்ந்த தற்காலிக ஊழியர் கோவிந்தராஜ் என்பவர் திடீரென தலைமறைவாகி உள்ளார்.

ஆணி வேரை அசைக்கும் திருமா; உச்சக்கட்ட அதிருப்தியில் திமுக!

இதனால் போலீசாருக்கு கோவிந்தராஜ் மீது சந்தேகம் வலுத்தது. எனவே அவரை பிடித்து விசாரித்தால் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என போலீசார் கருதினர்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் தலைமறைவான கோவிந்தராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி