ஆப்நகரம்

வதைக்கும் புதிய சிக்கல்; கவலையில் ஓய்வூதியர்கள்!

வாட்டி வதைக்கும் புதிய சிக்கலால் ஓய்வூதியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 20 Apr 2022, 5:39 pm
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர பொருளாளர் மீனாட்சிசுந்தரம் மாவட்ட துணை தலைவர்கள் உலகநாதன், ராஜமாணிக்கம் மாவட்ட இணை செயலாளர்கள் வேதரத்தினம், வெங்கடாசலம் சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணை தலைவர் மதிவாணன், கிராம உதவியாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், ஓய்வுப் பெற்ற அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் வட்டச்செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படாத சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7800 வழங்க வேண்டும் மற்றும் அனைத்து பணியாளர்களையும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைத்து மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும்.


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்ற வேண்டும்.

1 முதல் 8ம் வகுப்பு வரை... கட்டணமே இல்லை; தனியார் பள்ளிகளில் சேர உடனே முந்துங்கள்!

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு காப்பீட்டு நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது. எனவே, சிகிச்சை பெற்று நிலுவை தொகை கிடைக்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

அடுத்த செய்தி