ஆப்நகரம்

தமிழக அரசு முடிவு; முதல்வருக்கு ஆதியன் மக்கள் நன்றி!

தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 7 Dec 2021, 8:22 pm
நாகப்பட்டினம் அவுரித்திடலில் ஆதியன் இன மக்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ள தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், நடிகர் சூரியாவிற்கு நன்றி தெரிவித்தும் கூட்டம் நடைபெற்றது.
Samayam Tamil கொட்டு அடித்து முதல்வருக்கு நன்றி
கொட்டு அடித்து முதல்வருக்கு நன்றி


ஆதியன்அறக்கட்டளை சார்பில் மாநில தலைவர் வீரையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வானவில் அறக்கட்டளை சமூக ஆர்வலர் ரேவதி மற்றும் நாகை திருவாரூர் தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த ஆதியன் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

Breaking News: ரேஷன் கார்டு; அதிரடி தகவல் வெளியானது!

அப்போது அவர்கள் கொட்டடித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் ஆதியன் என மக்களை கணக்கெடுக்கும் பணியில் செய்துள்ள தமிழக அரசு தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாதி சான்றுகளை, டிசம்பர் 31ம் தேதிக்குள் வழங்கும் பணியை தொடங்க வேண்டும் என்று அவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.

அடுத்த செய்தி