ஆப்நகரம்

வெறிச்சோடிய வேளாங்கண்ணி; வியாபாரிகள் விரக்தி!

பொங்கல் பண்டிகை காலமாக இருந்தாலும் தமிழக அரசு உத்தரவு காரணமாக வேளாங்கண்ணி ஆலயம் மூடப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வேளாங்கண்ணி ஆலயம் வெறிச்சோடி காணப்பட்டது.

Samayam Tamil 15 Jan 2022, 4:08 pm
கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட மூன்று தினங்களும் வழிபாட்டு தலங்களை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
Samayam Tamil வேளாங்கண்ணி கடற்கரை
வேளாங்கண்ணி கடற்கரை


வழக்கமாக தொடர் பொங்கல் விடுமுறை நாட்களில் நாகை மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்திற்கு ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து, உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம்.

இந்நிலையில் தற்பொழுது தமிழக அரசின் உத்தரவின்படி வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டு இருந்தாலும் கூட பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் பதிலடி; பெட்டி பாம்பாய் அடங்கிய பிரஸ்!

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், எண்ணில் அடங்கா சுற்றுலாப் பயணிகள் கடலில் குளித்து மகிழும் இடம் தற்பொழுது, மிக குறைந்த அளவிளான சுற்றுலாப் பயணிகளோடு வெறிச்யோடி காணப்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து கடைகள் திறந்த வியாபாரிகளுக்கும் வியாபாரம் இல்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி