ஆப்நகரம்

புகழ்பெற்ற திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; 24 ஆண்டுகளுக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

புகழ்பெற்ற திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 12 Feb 2023, 1:50 pm

ஹைலைட்ஸ்:

  • நாகை அருகே சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றான திருக்குவளை ஶ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம்
  • குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது
  • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil புகழ்பெற்ற திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
புகழ்பெற்ற திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சப்த விடங்க ஸ்தலம்:
நாகை அருகே சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றான திருக்குவளை ஶ்ரீ தியாகராஜ சுவாமி ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மடாதிபதிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


24 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா:

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஶ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயமானது சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும், நவ கோள்களின் தோஷம் நீக்கிய ஸ்தலமாகவும், விளங்குகிறது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலய கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கடந்த 8ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 5 கால யாக சாலை பூஜைக்கு பிறகு இன்று காலை 6வது கால யாக சாலை பூஜையும், தொடர்ந்து மகா பூர்ணாஹீதி நடைபெற்றது. பின்னர் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கடம் புறப்பாடாகியது. அப்போது நாதஸ்வர வித்துவான்கள் மல்லாரி ராகம் வாசிக்க, உட்பிரகாரத்தில் கடம் வலம் வந்தது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதனைத்தொடர்ந்து இராஜகோபுரம், மூலவரான பிரம்மபுரீஸ்வரர் மற்றும் வண்டமருபூங்குழலாள் அம்பாள், தியாகராஜ சன்னதி, முருகன் சன்னதி உள்ளிட்ட கோபுர கலசங்களில் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஆருரா தியாகேசா என மனமுருகி வழிப்பட்டது.தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.பின்னர சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

மகா சிவராத்திரி 2023: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் கொடியேற்றம்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு:

இவ்விழாவில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு, ஜெயச்சந்திரன், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மற்றும் தருமை ஆதீனம்,‌ வேளாங்குறிச்சி ஆதீனம், சூரியனார் கோவில் செங்கோல் ஆதீனம், உள்ளிட்ட பங்கேற்றனர். மேலும் கும்பாபிஷேக விழாவை காண திருவாரூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி