ஆப்நகரம்

நாகைக்கு வந்த..அடுத்த சோதனை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நாகைக்கு வந்துள்ள புதிய எச்சரிக்கையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 24 Nov 2021, 8:18 pm
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல், கீழ்வேளூர், வலிவலம், கீழையூர், பூவைத்தேடி, வேட்டைக்காரன்இருப்பு உள்ளிட்ட இடங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வந்தது.
Samayam Tamil வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்



இந்நிலையில் தற்போது இடியுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்த விளை நிலங்களில் மழை நீர் வடியத் துவங்கியது.

கவர்னர் எடுத்த திடீர் முடிவு; குடும்பத்தினர் செம ஹேப்பி!

இந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டு உள்ள பயிர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி