ஆப்நகரம்

தலைவர் சீட்டில் திமுக நிர்வாகி; யார் தருவார் இந்த அரியாசனம்?

யார் தருவார் இந்த அரியாசனம்? என்ற ரேஞ்சுக்கு தலைவர் இருக்கையில் அமர்ந்து திமுக நிர்வாகி ரசிக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 3 Jun 2022, 3:42 pm
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் இருக்கையில் அவரது கணவரான திமுக நிர்வாகி அமர்ந்துள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது
Samayam Tamil தலைவர் சீட்டில் திமுக நிர்வாகி
தலைவர் சீட்டில் திமுக நிர்வாகி


தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த பிரவரி 19ம் தேதி நடந்து முடிந்து இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி காலை 8 மணியளவில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையானது, தமிழகம் முழுவதும் 279 மையங்களில் நடைபெற்றது.

இருக்கி அணைச்சு ஒரு உம்மா; முதல்வரை சீண்டும் எச்.ராஜா!

இந்த தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான வார்டுகளை கைப்பற்றி, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்தன.

இதன் காரணமாக மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகள் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டின.

இதன் முடிவில் பெரும்பாலான பதவிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. அதே சமயம் திமுகவில் நகர மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர்கள் பதவிகளுக்கு அதிக அளவில் பெண் பிரதிநிதிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டது.

மோடிக்கு தேர்வு வைக்கும் சீமான்; அமீத் ஷாவும் எழுத வேண்டுகோள்!

அந்தவகையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவியை திமுகவை சேர்ந்த இந்திராகாந்தி கைப்பற்றினார். அதன்படி தலைவராக இந்திரா காந்தி தனது பணியை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்து வரும், இந்திராகாந்தியின் தலைவர் இருக்கையில் அவருடைய கணவர் சேகர் அமர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் இருப்பவர்கள் மட்டுமே அலுவலகத்துக்கு வந்து பணி ஆற்ற வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் சேர்மன் இருக்கையில், அவரது கணவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி