ஆப்நகரம்

அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும்?.. வேளாங்கண்ணியில் வி.கே. சசிகலா சொன்ன நச் பதில்..!

உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வருகை தந்த வி.கே. சசிகலா, அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு நச் பதிலை அளித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 23 Mar 2023, 7:16 pm

ஹைலைட்ஸ்:

  • அதிமுக யாரிடம் சென்றால் நன்றாக இருக்கும்
  • தொண்டர்களிடம் கேட்டால் சரியான பதிலை கூறுவார்கள்
  • வி.கே. சசிகலா வேளாங்கண்ணியில் பேட்டி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வி.கே. சசிகலா
உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வருகை தந்த வி.கே. சசிகலா, அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கும் நச் பதிலை அளித்துள்ளார்.
வி.கே. சசிகலா வேளாங்கண்ணியில் பேட்டி:
அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை தொண்டர்களிடம் கேட்டால் சரியான பதிலை கூறுவார்கள் என வி.கே. சசிகலா வேளாங்கண்ணியில் பேட்டியளித்துள்ளார்.

திருவாரூரில் நடைபெற உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சொகுசு விடுதியில் விகே.சசிகலா, தனது உறவினர்களோடு தங்கியிருந்தார். அப்போது சசிகலாவை ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் 20க்கும் மேற்பட்டோர் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


பின்னர் அங்கிருந்து திருவாரூர் புறப்பட்ட, சசிகலாவிடம் சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சட்டமன்றம் மக்கள் பிரச்னைகளை பேசும் இடம். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை மக்கள் பிரதிநிதிகள் தாராளமாக பேசலாம். அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உரிமை உள்ளது என்று கூறினார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, இதனை அதிமுக தொண்டர்களிடம் கேட்டால் சரியான பதிலை கூறுவார்கள் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சட்டமன்றத்தில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாகையில் ஓபிஎஸ் தரப்பினர் சசிகலாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே சசிகலா வேளாங்கண்ணி வருகை தந்தார்.

தமிழ்நாட்டில் அதிமுகவின் எதிர்காலம்: சொல்றதுக்கு ஒன்னும் இல்ல - திருச்சியில் சீமான் பரபரப்பு பேட்டி!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள MGM தனியார் சொகுசு விடுதிக்கு வருகை தந்து, இன்று இரவு திருவாரூரில் நடைபெறவிருக்கும் உறவினரின் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். வேளாங்கண்ணிக்கு வருகை தந்த வி.கே. சசிகலாவிற்கு அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.‌இந்நிகழ்ச்சியில் அவரது உறவினர் இளவரசி மற்றும் கீழையூர் ஒன்றிய கழக செயலாளர் சரவணபவன், நாகை ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் உள்ளிட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.‌
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி