ஆப்நகரம்

இளைஞர் வயிற்றின் மீது ஏறிய கோயில் தேர் - நாகையில் நிகழ்ந்த சோகம்!

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே உள்ள உத்திராபதிஸ்வரர் கோயில் திருவிழாவின் போது தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Apr 2022, 11:49 am
நாகை மாவட்டம், திருமருகல் உத்திராபதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் தேரோட்ட நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக செய்யப்பட்டிருந்தன.
Samayam Tamil nagapattinam chariot accident


தேர் திருவிழாவின் போது தீபராஜன் என்பவரது குடும்பத்தினர் தான் தொன்றுதொட்டு தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று தேர் திருவிழாவின் போது தீபராஜன் தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

உத்திராபதீஸ்வரர் கோயில் தேர், தெற்கு வீதி பகுதியில் திரும்பிய போது தீபராஜன் எதிர்பாராத விதமாக தேர் சக்கரம் தீபராஜன் வயிற்றில் ஏறி இறங்கியது. அவரை மீட்ட பொதுமக்கள் திருமருகல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருகண்ணபுரம் போலீசார் விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை களிமேடு பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த தேர் விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், நாகையில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜ் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி