ஆப்நகரம்

காவிரி ஆற்றில் கலந்த கழிவுநீர்: 11 சாயப் பட்டறைகளுக்கு அதிகாரிகள் சீல்!

குமாரபாளையத்தில் விதிகளை மீறி இயங்கியதோடு, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கும், நீராதாரங்களையும் மாசுபடுத்திய சாயப் பட்டறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 25 May 2022, 6:16 pm

ஹைலைட்ஸ்:

  • வீதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 சாய ஆலைகளுக்கு சீல்
  • மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சாயப்பட்டறை
நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பிரதான தொழிலாக சாயப்பட்டறை தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
அனால் இங்கு இயங்கும் சாய தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை அனுமதி பெறாமல் இயங்கி வந்ததுடன், சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக கால்வாய்கள் மூலம் காவிரி ஆற்றில் கலந்துவிட்டதால் குடிநீர் மாசுபடுவதாக புகார் எழுந்தது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள், புற்றுநோய், உடல் ஒவ்வாமை உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த புகாரின் பேரில் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விதிமுறைகளை மீறி சாய கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் வெளியேற்றிய சாய ஆலைக்கு மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.

இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின் படி, அவ்வப்போது சாயக்கழிவுகள் சுத்திகரிக்கப்படுகின்றவா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாமக்கலில் துவங்கிய ஜமாபந்தி... அதிகாரிகள் அளித்த உறுதிமொழி!
அதன் ஒரு பகுதியாக இன்று பள்ளிபாளையத்தில் சமயசங்கிலி, ஆவத்திபாளையம், களியனூர் சுற்றுவட்டாரத்தில் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த 11 சாய ஆலைகளுக்கு மாசு கட்டுபாட்டுவாரியம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ஓடைகளில் செல்லும் நீரில் உள்ள உப்பு தன்மை குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அனுமதி பெற்று இயங்கும் சாய ஆலைகள் கழிவுகளை முறையாக சுத்திகரிக்காமல், சாய கழிவுகளை நேரடியாக வெளியேற்றி வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி