ஆப்நகரம்

Breaking: விபத்தில் முடிந்த டிராக்டர் பயிற்சி... கணவன், மனைவி பலி..!

ராசிபுரம் அருகே டிராக்டரின் அடியில் சிக்கி கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலி

Authored byAditya Divakar Karkera | Samayam Tamil 23 Apr 2023, 1:10 pm
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருவாளா பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி கீதா. இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சிவகுமார் தனக்கு சொந்தமான விவசாய இடத்தில் மனைவி கீதாவுக்கு டிராக்டர் ஓட்ட பயிற்சி கொடுத்துள்ளார்.
Samayam Tamil tractor accident


அப்போது கீதாவின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தறிகெட்டு ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் தலை குப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் டிராக்டரின் அடியில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கோர சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரது உடல்களை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் உண்மையிலேயே விபத்தால் நடந்ததா அல்லது வேறேதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நாளில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சோகம் சிவகுமாரின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Aditya Divakar Karkera

அடுத்த செய்தி