ஆப்நகரம்

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை!

வரும் 29 ம் தேதி அந்தந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரிடம் செல்போன்களை ஒப்படைக்க உள்ளதாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

Curated bySrini Vasan | Samayam Tamil 26 Jun 2022, 8:35 pm

ஹைலைட்ஸ்:

  • அரசு வழங்கிய செல்போன்களால் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகிறது.
  • வரும் 29 ம் தேதி ஒப்படைக்க உள்ளதாக அறிவிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அங்கன்வாடி ஊழியர்கள்
நாமக்கல்லில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்கொடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்,

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அங்கன்வாடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குனரகம் சார்பில் செல்போன்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டன.

செல்போன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு அந்தந்த அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் விபரங்கள், சத்தான உணவுகள் குறித்த விவரங்களும் மற்றும் பல்வேறு பணிகள் குறித்த விபரங்களை தெரிவித்து வந்தோம்.

அரசு சார்பில் வழங்கப்பட்ட செல்போன்கள் காலாவதி ஆகிவிட்டதால் சிக்னல் பிரச்சினை, அடிக்கடி பழுது அடைந்து விடுவதால் செல்போன்களை பயன்படுத்த முடியாமல் உள்ளது. செல்போன்கள் பழுதடைந்தால் சொந்த பணத்தில் பழுது பார்க்க வேண்டிய நிலையும் உள்ளது.

6 மாதங்களில் 557 கிலோ பறிமுதல்.. நாமக்கல் எஸ்பி சொன்ன ஷாக்கிங் நியூஸ்!
செல்போன்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால் வரும் 29ஆம் தேதி அந்தந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களிடம் செல்போன்களை ஒப்படைக்க உள்ளோம். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் தற்போது உள்ள ஊழியர்கள் கூடுதல் மையங்கள் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி