ஆப்நகரம்

நாமக்கல்; 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

நாமக்கல் மோகனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 25 Apr 2023, 9:47 am

ஹைலைட்ஸ்:

  • நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

  • விவசாயிகளின் கோரிக்கை மனு

  • சிப்காட் அமைக்க எதிர்ப்பு

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
விவசாயிகள் கோரிக்கை
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகாவிற்கு உட்பட்ட வலையபட்டி பரளி,அரூர், புதுப்பட்டி ஊராட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் வந்தனர். மேலும் அவர்கள் கோரிக்கை குறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தங்களுக்கு மனுக்களை மாலையாக அணிந்து வந்து முற்றுகையிட்டு கோரிக்கை மனுக்களை தனித்தனியாக அளித்தனர்.
நிலம் கையகப்படுத்துதல்
அதில் தங்கள் பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை மூலம் சிப்காட் அமைய இருக்கின்றது. இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்காக வலையப்பட்டி, பரளி, அரூர், புதுப்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர், இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலேயே இந்த பகுதிகளில் தான் அதிக அளவு வெங்காயம் சாகுபடி நடைபெற்று வருகின்றது.

நாமக்கல்லில் பரிதாபம்; டிராக்டர் கவிழ்ந்து கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

சிப்காட் அமைப்பதனை கைவிட கோரிக்கை
மேலும் காய்கறி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிரிடப்படுகின்றது. நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் விவசாயமும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகளின் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் தலையிட்டு சிப்காட் அமைப்பதனை கைவிட வேண்டும் என கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளனர்.

மனுக்களை மாலையாக அணிந்து வந்த விவசாயிகள்
இவ்வாறு தொடர்ந்து நிலங்களை கையகப்படுத்தி வருவதினால் விவசாயிகள் அதிக அளவு பாதிப்படைகின்றது. அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டு வருகின்றது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதில் பெண்கள் உட்பட அனைவரும் அவரவர்களின் மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்ததினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி