ஆப்நகரம்

திருச்செங்கோடு; லாரி டயர் வெடித்து தீ விபத்து... பின்னால் வந்த டூ வீலர் சேதம்

கிரானைட் கல் லோடு ஏற்றி வந்த லாரி டயர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் லேசான காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 24 May 2023, 6:46 pm

ஹைலைட்ஸ்:

  • கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி
  • எதிர்பாராத விதமாக திடீரென லாரியின் டயர் வெடிப்பு
  • டீசல் டேங்க் தீப்பற்றி எரிந்தது
  • இருச்சக்கர வாகனத்தின் மீது தீ
  • இருவருக்கு லேசான காயம்

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil லாரி டயர் வெடித்து தீ விபத்து
லாரி டயர் வெடித்து தீ விபத்து
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருச்செங்கோட்டிற்கு கிரானைட் கல் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று திருச்செங்கோடு நோக்கி வந்தது. லாரியை அதன் ஓட்டுனர் சரவணன் ஓட்டி வந்தார். அவருடன் அருகில் லாரி உரிமையாளர் ராமசந்திர நாயுடுவும் உடன் இருந்தார்.
லாரியின் டயர் வெடிப்பு

அப்போது, லாரி புதிய பேருந்து நிலையம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக திடீரென லாரியின் டயர் வெடித்து டீசல் டேங்க் தீப்பற்றி எரிந்தது.

மிகவும் பரபரப்பான மக்கள் நடமாடும் பகுதியில் பலத்த சத்தத்துடன் லாரி திடீரென தீ பிடித்து லாரி எரிந்ததால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ராசிபுரம் அருகே சோகம்; கொய்யாப்பழம் பறிக்க சென்ற மாணவன் கிணற்றில் விழுந்து பலி!
இருசக்கர வாகனத்தில் தீ

அப்போது லாரியின் பின்புறம் வந்த இருச்சக்கர வாகனத்தின் மீது தீ பட்டதால் அதுவும் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

இதில் இருச்சக்கர வாகனத்தில் வந்த பால்மடை பகுதியை சேர்ந்த நரசிம்மா மற்றும் அவரது மனைவி சரஸ்வதி லேசான காயங்களோடு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ அணைப்பு

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இதனால் ஒரு மணி நேரம் பேருந்து நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி