ஆப்நகரம்

ஏரியில் மண் திருடும் கும்பல்.. காவல் நிலையம் முற்றுகை.. போலீசாருடன் தள்ளுமுள்ளு!

மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 16 Aug 2022, 4:46 pm

ஹைலைட்ஸ்:

  • மண் திருட்டில் ஈடுபட்டு வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் முற்றுகையிட முயற்சி
  • போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு
  • 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil namakkal
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட கல்லங்காட்டுவலசு பகுதியில் உப்புக்குளம் என்னும் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சிலர் சட்டவிரோதமாக மண் திருடி விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்க சென்ற சிபிஎம் கட்சியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரை மண் திருட்டில் ஈடுபட்டு வரும் கும்பல் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த குப்புசாமி மற்றும் அவரது சகோதரர் மகன் ஆகியோர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து புகார் அளித்தும் குமாரபாளையம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, சி.பி.எம். கட்சியின் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பெருமாள் தலைமையில் 8 பெண்கள் உட்பட சுமார் 30 பேர் காவல் நிலையத்தை முற்றுகையிட குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர்.

13 நாட்களாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு; 16 டிஎம்சி நீர் காவிரியில் கலப்பு!

அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் முயற்சி செய்த போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து 30 பேரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‌
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி