ஆப்நகரம்

பள்ளிகளுக்கு அருகே சாதி கயிறுகளை விற்றால் கடும் நடவடிக்கை: எச்சரிக்கை விடுத்த நாமக்கல் எஸ்.பி!

நாமக்கல் மாவட்ட காவல்துறை பள்ளிகளுக்கு அருகே சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் கயிறுகள் மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்ய கூடாது என காவல்துறையினர் வணிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 30 Jun 2022, 11:22 am

ஹைலைட்ஸ்:

  • சாதி கயிறுகளை விற்றால் கடும் நடவடிக்கை
  • நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நாமக்கல் எஸ்.பி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டி வருகின்றனர். இதனால் பல சாதிக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் போதும் மற்றும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்திலும் அனைவரோடும் கலந்து பழகாமல் குழுக்களாக இயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை ஊக்குவிக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அருகே செயல்படும் பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் பேன்சி ஸ்டோர்களில் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான கயிறு, ஸ்டிக்கர்ஸ், மற்றும் டி-சர்ட் போன்ற பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

எனவே, மாணவர் நலன் கருதி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகே செயல்படும் கடைகளில் சாதி உணர்வை தூண்டும் வகையில் உள்ள வண்ண கயிறுகள், ஸ்டிக்கர்கள், டி - சர்ட்டுகள் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி