ஆப்நகரம்

அண்ணாமலை கூட்டத்தில் செய்தியாளர் மீது தாக்குதல்... நாமக்கலில் பரபரப்பு!

நாமக்கல்லில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 9 Jun 2022, 11:37 am
நாமக்கல் பூங்கா சாலையில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணை தலைவர்கள் வி‌.பி.துரைசாமி, கே.பி. ராமலிங்கம் ஆகியோர் கலந்து மத்திய அரசின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
Samayam Tamil அண்ணாமலை கூட்டத்தில் செய்தியாளர் மீது தாக்குதல்


இதன்பின் கூட்டம் முடிவடைந்து அண்ணாமலை மேடையில் இருந்து கீழே இறங்கினார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளை கேட்க அண்ணாமலை காரின் அருகில் தயாராக இருந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆனால் அங்கு வந்த அண்ணாமலை தற்போது பேட்டி ஏதும் இல்லை என தெரிவித்து காரில் ஏற முற்பட்டார். அப்போது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ஏன் இல்லை என கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அப்போது அண்ணாமலை உங்கள் நிறுவனத்தில் தான் வேலை செய்யவில்லை என தெரிவித்து காரில் ஏறி சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அந்த செய்தியாளரை தள்ளிவிட்டு அண்ணாமலையின் கார் செல்ல வழி விட்டதாகவும் இதனால் அந்த செய்தியாளர் அண்ணாமலையின் காரை தட்டியதாக கூறப்படுகிறது.

கல்விக்கடன் உயர்வு... அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

இருந்தபோதிலும் அண்ணாமலையின் கார் வேகமாக சென்றுவிட்ட நிலையில் இதனைகண்ட அங்கிருந்த பாஜக தொண்டர்கள் செய்தியாளர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் செய்தியாளரை மீட்டு அனுப்பி வைத்தனர். மேலும் பாஜகவினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி