ஆப்நகரம்

நாமக்கல் திமுகவில் கடைசி நேர ட்விஸ்ட்... அடுத்த மா.செ இவர் தானாம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் நடக்கப் போகும் திருப்பங்கள் குறித்து முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 26 Sep 2022, 10:55 am
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவில் 15வது உட்கட்சி பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஒன்றிய செயலாளர், கிளை செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தங்களுடைய மாவட்ட செயலாளர் பதவிகளை தக்க வைத்துக் கொள்ளும் நிலையில், போட்டி இருக்கும் இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது.
Samayam Tamil twists and turns in namakkal district dmk secretary election by mk stalin family
நாமக்கல் திமுகவில் கடைசி நேர ட்விஸ்ட்... அடுத்த மா.செ இவர் தானாம்!


ஸ்டாலின் நடத்திய ஆலோசனை

மாவட்ட செயலாளர் தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சென்னை அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினார். அதில் கடந்த தேர்தல்களில் சரிவர பணியாற்றாத நபர்கள், உள்ளடி வேலைகளில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்டோரை மாற்றிவிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியில் இருந்து சிலரை பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சபரீசன், துர்கா ஸ்டாலின் ஆகியோரின் தலையீடும் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

உதயநிதி பாலிடிக்ஸ்

அதாவது உதயநிதியின் அரசியல் எதிர்காலத்திற்கு சிக்கல் ஏற்படாத வகையில் ஆட்கள் தேர்வு நடத்தப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கிழக்கு, மேற்கு என்று இரண்டாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக கே.ஆர்.என் ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளராக கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் பொறுப்பில் இருக்கின்றனர்.


வேற லெவலில் மாறப்போகும் தமிழ்நாடு அரசு துறை அலுவலகங்கள்; அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி!

மூர்த்திக்கு வாய்ப்பு இல்லை

இதில் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கே.எஸ்.மூர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை என்று கட்சி தலைமை கறாராக கூறிவிட்டதாம். அதற்கு காரணம் நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் அதிமுக, சுயேட்சைகள் வசமுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சொந்த தொகுதியிலேயே சுயேட்சை வேட்பாளர் தான் நகரமன்ற தலைவராக உள்ளார். இதன் பின்னணியில் திமுகவினர் செய்த உள்ளடி வேலைகள் தான் காரணம் என்று உடன்பிறப்புகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மதுரா செந்திலுக்கு வாய்ப்பு

இதேபோல் பள்ளிபாளையம், திருச்செங்கோடு நகராட்சிகளிலும் கட்சி அறிவித்த வேட்பாளர்களை ஓரங்கட்டி விட்டு புதிய நபர்கள் தான் நகர்மன்ற தலைவர் நாற்காலியை அலங்கரித்து வருகின்றனர். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தியால் சுயேட்சை வேட்பாளர்களிடம் பேசி அரவணைக்க முடியவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் திமுக தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன. எனவே நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் நிச்சயம் மாற்றம் வரும் என்று தெரிகிறது.


வார்டு செயலாளருக்கு கிடைக்கும் மரியாதை கூட இந்த அமைச்சருக்கு கிடைப்பதில்லை.. தங்கமணி பரபரப்பு குற்றச்சாட்டு!

கடைசி நேர மாறுதல்

மேற்கு மாவட்ட செயலாளராக மதுரா செந்தில் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இவர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வருகிறார். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான நபராக இருக்கிறார். இவருடன் குமாரபாளையத்தைச் சேர்ந்த வெங்கடாசலம், வெப்படையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் கடைசி நேர ட்விஸ்டாக திமுக தலைமை அறிவுறுத்தலின் பேரில் நாமக்கல் தொகுதி எம்.எல்.ஏ பெ.ராமலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மீண்டும் ராஜேஷ்குமார்

இவர் நாமக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாவட்டத்தை பொறுத்தவரை கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரே மீண்டும் நியமிக்கப்பட உள்ளார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் திமுகவே பெருவாரியான வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி கட்சியினரை அரவணைத்து செல்வதிலும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதிலும் மு.க.ஸ்டாலினிடம் நற்பெயரை வாங்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின், சபரீசன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரின் சிபாரிசும் உள்ளது. இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி