ஆப்நகரம்

நடந்தே சென்று காய்கறி விற்ற மூதாட்டி; கருணையற்ற 2 பேருக்கு போலீஸ் வலை!

நடந்தே சென்று காய்கறி விற்று பிழைப்பு நடத்தும் 77 மூதாட்டிக்கு இரக்கம் காட்ட மறுத்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 12 May 2022, 3:20 pm
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட போதுப்பட்டியை சேர்ந்தவர் மூதாட்டி வரதம்மாள் (77). இவர், தனது தோட்டத்தில் விளையும் காய்கறிகளை ஏ.எஸ்.பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று விற்பனை செய்வது வழக்கம்.
Samayam Tamil பைக் கொள்ளையர்கள்
பைக் கொள்ளையர்கள்


இந்நிலையில் இன்று ஏ.எஸ் பேட்டை பகுதிக்கு உட்பட்ட கே.கே.பி. நகரில் மூதாட்டி வரதம்மாள் சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து பல்சர் பைக்கில் வந்த 2 இளைஞர்கள் மூதாட்டி அணிந்திருந்த 6 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி வரதம்மாள் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்சர் பைக்கில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.

சென்னையில் குவியும் ரேஷன் ஊழியர்கள்; காத்திருப்பு போராட்டம்..கலக்கத்தில் அரசு!

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் டி.எஸ்.பி சுரேஷ் சம்பவ குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கடந்த ஒரு வாரத்தில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் ஏ.டி.எம் கொள்ளை, நகை அடகு கடை கொள்ளை, டவுசர் கொள்ளையர்கள், செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவங்கள் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் ரோந்து பணிகளில் அவ்வப்போது ஈடுபட வேண்டும்.

அப்போது தான் வழிப்பறி திருடர்களுக்கு அச்சம் வரும். இனியும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறினால் அதற்கு காவல் துறையே பொறுப்பு. இவ்வாறு பொதுமக்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அடுத்த செய்தி