ஆப்நகரம்

அது இல்லாம எங்க நாட்டுக்குள்ள வராதிங்க: கனடா அதிரடி அறிவிப்பு!

கோவிட்-19 டெஸ்ட் சான்றிதழ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கனடா அறிவித்துள்ளது.

Samayam Tamil 31 Dec 2020, 6:49 pm
வெளிநாடுகளில் இருந்து கனடா வருவோர் அனைவரும் கோவிட்-19 நெகடிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கனடா அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil Canada


கொரோனா தொற்றை கண்டறிய உதவும் பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டு, கொரோனா தொற்று இல்லை என நெகடிவ் சான்றிதழ் கிடைத்தபிறகே கனடாவுக்கு வரவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான பயணத்துக்கு தடை நீட்டிப்பு: இந்திய அரசு உத்தரவு!
விமானத்தில் ஏறுவதற்கு முன் மூன்று நாட்களுக்குள் பிசிஆர் பரிசோதனை செய்து சான்றிதழை எடுத்துவர வேண்டுமென கனடா அரசு அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், கோவிட்-19 நெகடிவ் சான்றிதழுடன் வந்தாலும், பயணிகள் அனைவரும் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோக, கனடாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என வெளியுறவு துறை அமைச்சர் டாமினிக் டெப்லாங் தெரிவித்துள்ளார்.

தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி இல்லை: விஜய் கோரிக்கை நிராகரிப்பு?
இங்கிலாந்தில் அதிவேகத்தில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் கனடாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே பரவும் கொரோனாவை காட்டிலும் புதிய கொரோனா 70% அதிக வேகத்தில் பரவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக வெளிநாட்டு பயணிகளுக்கு கனடா அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அடுத்த செய்தி