ஆப்நகரம்

100 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சிலை மீண்டும் இந்தியாவுக்கு பயணம்!

100 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட அன்னபூரணி சிலை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறது.

Samayam Tamil 21 Nov 2020, 4:05 pm

இந்தியாவில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட இந்து கடவுள் சிலையை மீண்டும் இந்தியாவிடமே வழங்க கனடா முடிவு செய்துள்ளது.
Samayam Tamil அன்னபூரணி


வாரணாசியில் உள்ள ஒரு கோயிலில் இருந்து நூறு ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட அன்னபூரணி சிலையை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க கனடாவை சேர்ந்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளையும், காலிய ஆதிக்கத்தால் ஏற்பட்ட சேதத்தையும் சரிசெய்யும் நோக்கில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. மெக்கென்சி கலை கூடத்தில் ரெஜினா பல்கலைக்கழகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்த அன்னபூரணி சிலையும் அடங்கும்.

ஆசிடில் முக்கி இந்திய பெண் கொடூர கொலை: துப்பு கொடுத்தால் ரூ.2.7 கோடி

இந்த சிலை நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து எடுத்துவரப்பட்டுள்ளதாக திவ்யா மேஹ்ரா என்ற கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து இந்த சிலையை இந்தியாவிடம் திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக ரெஜினா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலையை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கனடாவில் இருக்கும் இந்திய உயர் ஆணையர் அஜய் பிஸரியாவை ரெஜினா பல்கலைக்கழகத்தின் தலைவரும், துணை வேந்தருமான டாக்டர் தாமஸ் சேஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து இந்திய உயர் ஆணையர் அஜய் பிஸரியா பேசியபோது, “இந்த தனித்துவமான அன்னபூரணி சிலை இந்தியாவுக்கு செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கலாச்சார சின்னத்தை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்த ரெஜினா பல்கலைக்கழகத்துக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி