ஆப்நகரம்

சத்தமாகப் பேசியதற்காக கொலை செய்த போதை ஆசாமி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியர் ஒருவர் தன்னுடன் அறையில் தங்கியிருந்தவரை போனில் சத்தமாகப் பேசியதற்காக கொலை செய்திருக்கிறார்.

Samayam Tamil 11 Sep 2018, 9:11 pm
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியர் ஒருவர் தன்னுடன் அறையில் தங்கியிருந்தவரை போனில் சத்தமாகப் பேசியதற்காக கொலை செய்திருக்கிறார்.
Samayam Tamil killing-scene_0c3e8654-b5a4-11e8-ab60-f008577e130d


ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கட்டிடத் தொழில் செய்யும் 37 வயதான இந்தியர் ஒருவர் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இவர் தன்னுடன் அறையில் தங்கியிருந்த மற்றொருவரை கத்தியால் குத்தி கொன்றிருக்கிறார்.

கொலை நேரில் பார்த்த விடுதி கண்காணிப்பாளர், “கொலை செய்த இந்தியருடன் அறையில் தங்கியவர் போனில் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். மெதுவாக பேசுமாறு அவரைக் கேட்டுக்கொண்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த அந்த இந்தியர் திடீரென தன்னிடமிருந்த கத்தியை எடுத்து எதிரில் இருந்தவரின் வயிற்றில் பலமாகக் குத்தினார்.” என்று தெரிவித்திருக்கிறார்.

தப்ப முயன்ற அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் அவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி