ஆப்நகரம்

இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜோ பைடன்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவருக்கு உயர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 23 Dec 2020, 6:47 am
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
Samayam Tamil white house


துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர்களது பதவியேற்பு விழா ஜனவரி 20ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளிகளான கௌதம் ராகவன், வினய் ரெட்டி ஆகியோருக்கு இயக்குநர் அந்தஸ்திலான பதவிகளை ஜோ பைடன் வழங்கியுள்ளார். இதில், அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனராக கௌதம் ராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னட மொழி கற்று செடி வளர்த்த சசிகலா: நாளை விடுதலையாகிறார் சுதாகரன்!
வெள்ளை மாளிகை மூத்த பணியாளர்களுக்கான கூடுதல் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களில் கௌதம், பைடன் அறக்கட்டளைக்கு ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார். இதுதவிர வெள்ளை மாளிகை மூத்த பணியாளர்களுக்கான கூடுதல் உறுப்பினர்களின் வேறு சில பெயர்களையும் பைடன் அறிவித்து உள்ளார்.
மீண்டும் தொடங்குகிறது 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு
ஜோ பைடன் ஏற்கெனவே தனது அமைச்சரவையில் இரு இந்தியர்களை இடம்பெறச் செய்தார். அறுவை சிகிச்சை வல்லுநர் விவேக் மூர்த்தி சுகாதார ம்ற்றும் மக்கள் சேவைத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார். பேராசிரியர் அருண் மஜும்தார் மின் சக்தித் துறைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார்.

அடுத்த செய்தி