ஆப்நகரம்

விநாடி வினாவில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய வம்சாவளி சிறுவன்

அமெரிக்காவில் நடைபெற்ற சிறுவர்களுக்கான விநாடி வினா போட்டி யில் இந்திய வம்சாவளி சேர்ந்த சரத் நாராயண் வெற்றி பெற்று ரூ.68 லட்சம் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

TOI Contributor 24 Nov 2016, 2:24 pm
அமெரிக்காவில் நடைபெற்ற சிறுவர்களுக்கான விநாடி வினா போட்டியில் இந்திய வம்சாவளி சேர்ந்த சரத் நாராயண் வெற்றி பெற்று ரூ.68 லட்சம் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.
Samayam Tamil indian american boy wins 100000 in top us quiz show
விநாடி வினாவில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய வம்சாவளி சிறுவன்


அமெரிக்காவில் சிறுவர்களுக் கான ஜியோபார்டி ("Jeopardy!" ) விநாடி வினா நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த தொடரின் 33-வது சீஸனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சரத் நாராயண் பங்கேற்றார். பல்வேறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் பலரை வென்ற சரத் இறுதிச் சுற்றில் அலெக்ஸ் பிஸ்த்தால், மைக்கேல் போராக்கியைச் சந்தித்தார்.

நேர்த்தியாக விளையாடிய சரத் நாராயண், சாமர்த்தியமாக பதில் அளித்து முதல் பரிசான ரூ.68 லட்சத்தை வென்றார். பின்னர் வெற்றி மகிழ்ச்சியில் பேட்டியளித்த சரத், ‘‘எனது குடும்பத்துடன் ஐரோப்பாவுக்கு இன்ப சுற்றுலா செல்ல விரும்புகிறேன். எனினும் பரிசுத் தொகையில் பெரும்பகுதி கல்லூரி கட்டணத்துக்கும், வரிக்கும் சென்று விடும்’’ என்று கூறினார்.

2.3 கோடி மக்கள் இந்த வினாடிவினா நிகழ்ச்சியை பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தாண்டு தொடகத்தில் காட்சிப்பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியானது கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை டிவியில் ஒளிப்பரப்ப பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி