ஆப்நகரம்

குவைத் வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

குவைத் நாட்டில் இருந்து இந்தியா வர விரும்புவோருக்கு பதிவு பணிகளை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 30 Oct 2020, 9:19 pm

வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இதில் குவைத் நாட்டில் தமிழர்கள், மலையாளிகள் ஏராளமாக வேலை செய்துவருகின்றனர். தற்போது கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் குவைத்தில் சிக்கியுள்ளனர்.
Samayam Tamil இந்திய தூதரகம்


இந்நிலையில், இந்தியா வர விரும்பும் இந்தியர்களுக்கு பதிவு பணிகளை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது. இந்தியா செல்ல விரும்புவோரின் உண்மையான விவரங்களை சேகரிப்பதற்காக இந்திய தூதரகம் பதிவுப் பணி தொடங்கியுள்ளது.

எனவே, இந்தியா செல்ல விரும்புவோர் அடுத்த சில தினங்களில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா செல்ல விரும்புவோர் இந்திய தூதரகத்தில் பதிவு செய்திருந்தனர். ஆனால் அவர்களில் பலரும் திரும்ப வரவில்லை.

சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இந்நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியுள்ள பதிவில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், இமெயில், குவைத்தில் பயன்படுத்தப்படும் மொபைல் எண், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட பதிவு எண், விசா நிலவரம், இந்தியாவில் சொந்த மாநிலம், அருகில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்.

நவம்பர் 5ஆம் தேதிக்குள் பதிவு பணிகளை முற்றிலும் முடித்துக்கொள்ள வேண்டுமென குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி