ஆப்நகரம்

மடகாஸ்கரை கலக்கும் இந்திய இலக்கியம்.. குவியும் பாராட்டுகள்!

மடகாஸ்கரில் உள்ள இந்திய தூதரகம் சார்பாக இலக்கிய நிகழ்ச்சி நடத்தப்பட்டு தெரு நூலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Jan 2021, 5:53 pm
மடகாஸ்கர் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மாதாந்திர இலக்கிய நிகழ்ச்சியான 'LaLitTana' என்ற விழாவை நடத்தி வருகிறஹ்டு. இவ்வகையில், இதன் 10ஆம் இலக்கிய விழா நேற்று மடகாஸ்கர் தலைநகர் அண்டனானரிவோவில் நடைபெற்றது.
Samayam Tamil Street Library


இந்நிகழ்ச்சியில், மலகாசி மொழி கவிஞர்கள் மொழி பெயர்த்த இந்திய கவிதைகளை படித்துக் காட்டினர். கொரோனா காலகட்டத்தால் 10 மாதங்களாக இந்த இலக்கிய நிகழ்வு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இம்மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

துபாயில் வேலை தேடுவோருக்கு சூப்பர் நியூஸ்!
கடந்த சுமார் 3,000 ஆண்டுகளாக 28 இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஏராளமான இலக்கியங்களும், கவிதைகளும் மலகாசி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்பு பணிக்கு பிரபல மலகாசி எழுத்தாளர் மிக்கேல் ரகோட்ஸன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த இலக்கியங்கள் இந்தியாவையும், மடகாஸ்கரையும் நெருக்கமாக கொண்டுவரும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய தூதரகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெரு நூலகத்தை அவர் நேரில் சென்று பார்த்து அங்கிருக்கும் புத்தகங்களையும் பார்வையிட்டார்.

மடகாஸ்கர் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், இந்தியா குறித்த அறிவை மேம்படுத்திக்கொள்ளவும் இந்த நூலகம் பெரிதும் உதவும் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அடுத்த செய்தி