ஆப்நகரம்

சவுதியில் சிக்கியிருந்த இந்தியர்கள் தாயகம் திரும்பினர் - அடுத்த ஃப்ளைட் எப்போ?

சவுதியில் சிக்கியிருந்த 1,583 பேர் இந்தியா திரும்பியுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 8 Oct 2020, 3:27 pm

கொரோனா பாதிப்பின் விளைவாக ஏராளமான தமிழர்கள் உள்பட இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர். இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர இந்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Samayam Tamil பயணிகள்


இந்நிலையில், அக்டோபர் 6ஆம் தேதி வரை சவுதி அரேபியாவில் இருந்து 1,583 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவுக்கு புறப்பட்ட இரண்டாம் தொகுதி பயணிகளின் மூன்றாம் விமானம் டெல்லியிலும், நான்காம் விமானம் லக்னோவிலும் வந்து சேர்ந்துள்ளன.

இத்துடன், இரண்டாம் தொகுதியில் இதுவரை இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஒட்டுமொத்த பயணிகளின் எண்ணிக்கை 1,162ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. இத்துடன், மொத்தமாக சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு 1,583 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.

அர்மீனியா உடன் வெடித்த போர்; அஜர்பைஜான் தமிழர்கள் எப்படி இருக்கின்றனர்?

இவர்களில் 811 பேர் ரியாத்தில் இருந்தும், 351 பேர் ஜெட்டாவில் இருந்தும் வந்துள்ளனர். இதற்கு முன் கடந்த மே மாதம் 421 பேர் இந்தியா வந்து சேர்ந்தனர். அவர்களில் 207 பேர் ஜெட்டாவில் இருந்தும், 214 பேர் ரியாத்தில் இருந்தும் வந்து சேர்ந்தனர்.

பயணிகளை முறையாக இந்தியாவுக்கு அழைத்து வர ஒத்துழைத்த சவுதி அரேபியா அரசு, சவுதி ஏர்லைன்ஸ், தமிழக அரசு, உத்தரப் பிரதேச, தமிழக, தெலங்கானா, டெல்லி அரசுகளுக்கும் இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் ரியாத்தில் 419 பேரும், ஜெட்டாவில் 140 பேரும் சிக்கியிருக்கின்றனர். இவர்களையும் இந்தியா அழைத்து வர சவுதி அரசுடன் இந்திய தூதரகம் ஆலோசனை நடத்தி வருகிறது. அடுத்த வாரம் மற்றொரு விமானம் புறப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி