ஆப்நகரம்

கொரோனாவால் வேலை போச்சு: திடீரென அடித்த ஜாக்பாட்... பணமழையில் NRI

கொரோனாவால் வேலையிழந்தபிறகு திடீரென அடித்த ஜாக்பாட். மகிழ்ச்சியில் அரபு வாழ் NRI.

Samayam Tamil 22 Dec 2020, 7:47 pm
கொரோனா பாதிப்பால் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுக்க ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்து நெருக்கடியில் தள்ளப்பட்டனர். கேரளாவை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியரான நவனீதன் சஜீவன் (வயது 30) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருக்கிறார்.
Samayam Tamil Photo: Navaneethan Sajeevan @Facebook


அபுதாபியை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் சஜீவன் வேலை செய்து வந்தார். ஆனால், கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சஜீவனுக்கு வேலை போனது. இப்போது அவர் நோட்டீஸ் காலத்தில் வேலை செய்து வருகிறார். சஜீவனுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

பொங்கல் விழாவிற்கு தயாராகும் சிகாகோ; தமிழர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!
இந்த சூழலில், ஒரே போன் காலில் அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. துபாய் டியூட்டி ஃப்ரீயில் இருந்து சஜீவனுக்கு வந்த போன் காலில், லாட்டரியில் அவருக்கு ஒரு மில்லியன் டாலர் (7.38 கோடி ரூபாய்க்கு மேல்) கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே நிறைய கடன், வேலையிழப்பு என பல நெருக்கடிகளில் இருந்த சஜீவனுக்கு இந்த வெற்றி ஒரு மிகப்பெரிய நிவாரணமாக இருந்தது. இதுகுறித்து அவர் பேசியபோது, “எனது மனைவி இன்னும் இங்கு வேலை செய்து வருகிறார். எனக்கு நல்ல வேலை கிடைக்காவிட்டால் இந்தியாவுக்கே திரும்பிச் செல்ல திட்டமிட்டிருந்தேன். எனக்கு 10,000 திர்ஹாம் கடன் இருக்கிறது. இந்த லாட்டரி வெற்றி எனக்கு பெரிதும் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் தொடங்குகிறது 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு
சொல்லப்போனால், துபாய் லாட்டரியில் ஏராளமான இந்தியர்கள் வெற்றிபெற்று வருகின்றனர். இந்த லாட்டரியில் வெற்றிபெற்ற 171ஆவது இந்தியர் நவனீதன் சஜீவன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பரபரம்பில் ஜார்ஜ் வர்கீஸ் என்பவரும் 1 மில்லியன் டாலர் லாட்டரியில் வெற்றிபெற்றார்.

அடுத்த செய்தி