நியூசிலாந்து மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மூன்று இந்தியர்கள் பலியானதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இருவேறு மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியானார்கள். 20 க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் காணவில்லை எனத் தெரியவந்தது. இவர்களில் முகமது பர்ஹஜ் அஹ்சன் (30), மற்றும் முகமது இம்ரான் (30) ஆகிய இளைஞர்களும் அன்ஸி அலி (25) என்ற இளம் பெண்ணும் உயிரிழந்ததாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அன்ஸி அலி என்ற பெண் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர். இறந் இளைஞர்கள் இருவரும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எஞ்சினியரான பர்ஹஜ் அஹ்சன் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். கடந்த 7 ஆண்டுகளாக நியூசிலாந்தில் வசித்துள்ளார். முகமது இம்ரான் என்பவரும் அதே மாநிலத்தின் கரீம்நகரைச் சேர்ந்தவர்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி, "மாயமான 9 பேரைப் பற்றி நியூசிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து தகவல் சேகரித்து வருகிறோம். இன்னும் இருவர் சிகிச்சை பெறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்." எனக் கூறியுள்ளார்.
காணாமல் போனவர்களில் 6 பேர் கடைசியாக தாக்குல் நடந்த இடத்துக்கு மிக அருகில் இருக்கும் டீன்ஸ் அவன்யூவில் மஜித் அல் நூர் பகுதிக்கு அருகே இருந்தனர் என கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இருவேறு மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியானார்கள். 20 க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் காணவில்லை எனத் தெரியவந்தது. இவர்களில் முகமது பர்ஹஜ் அஹ்சன் (30), மற்றும் முகமது இம்ரான் (30) ஆகிய இளைஞர்களும் அன்ஸி அலி (25) என்ற இளம் பெண்ணும் உயிரிழந்ததாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அன்ஸி அலி என்ற பெண் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர். இறந் இளைஞர்கள் இருவரும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எஞ்சினியரான பர்ஹஜ் அஹ்சன் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். கடந்த 7 ஆண்டுகளாக நியூசிலாந்தில் வசித்துள்ளார். முகமது இம்ரான் என்பவரும் அதே மாநிலத்தின் கரீம்நகரைச் சேர்ந்தவர்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி, "மாயமான 9 பேரைப் பற்றி நியூசிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து தகவல் சேகரித்து வருகிறோம். இன்னும் இருவர் சிகிச்சை பெறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்." எனக் கூறியுள்ளார்.
காணாமல் போனவர்களில் 6 பேர் கடைசியாக தாக்குல் நடந்த இடத்துக்கு மிக அருகில் இருக்கும் டீன்ஸ் அவன்யூவில் மஜித் அல் நூர் பகுதிக்கு அருகே இருந்தனர் என கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.