ஆப்நகரம்

மகளையும், மாமியாரையும் சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளி நபர்!

மகள் மற்றும் மாமியாரை இந்திய வம்சாவளி நபர் சுட்டுக் கொன்றுள்ளார்.

Samayam Tamil 15 Jan 2021, 11:49 pm
இந்திய வம்சாவளி நபர் ஒருவர் தனது மகள் மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியாவைச் சேர்ந்த பூபிந்தர் சிங் (57) என்பவர் அமெரிக்காவின் அல்பானி நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வைத்து மகள் ஜஸ்லீன் கவுர் (14) மற்றும் அவரது மாமியார் மன்ஜீத் கவுர் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

அதேசமயம், துப்பாக்கிச் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டில் இருந்து காப்பாற்றுவதற்காக வந்த ராஷ்பால் கவுர் என்ற பெண்ணின் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளன. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமெரிக்கா போகணுமா? இனி இது கட்டாயம் வேணும்!

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி