ஆப்நகரம்

அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் இந்திய மாணவரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார்.

TNN 10 Dec 2017, 7:31 pm
சிகாகோ: அமெரிக்காவில் இந்திய மாணவரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார்.
Samayam Tamil indian student shot at in us family seeks sushma swarajs help
அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது துப்பாக்கிச்சூடு


ஹைதராபாத் உபால் பகுதியை சேர்ந்தவர் முகமது அக்பர். 30 வயதான இவர் அமெரிக்காவின் இலினாய்ஸில் உள்ள டெவ்ரி பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படிக்கிறார்.

சனிக்கிழமை காலை சிகாகோவில் உள்ள பூங்கா அருகே தனது காரை எடுக்க சென்ற இவரை அடையாளம் தெரியாத நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதில் படுகாயமடைந்த அக்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனது மகனை பார்க்க அமெரிக்கா செல்ல அவசர விசா வழங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அக்பரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி