ஆப்நகரம்

சீனாவில் சாதனை படைத்த ஈரோடு கணக்கு வாத்தியார்!

2016ஆம் ஆண்டு முதல் முறையாக சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். 2018ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதையும் இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.

Samayam Tamil 19 Jan 2019, 7:21 am

ஹைலைட்ஸ்:

  • ஈரோடு கிருஷ்ணாம் பாளையத்தை ஐசக் தேவகுமார் சீனாவில் கணித ஆசிரியர்.
  • இவர் அந்நாட்டின் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதைப் 2வது முறை பெற்றுள்ளார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil 154782739246875
சீன அரசு பள்ளியில் பணியும் தமிழகத்தை சேர்ந்த கணித ஆசிரியர் இரண்டாவது முறையாக சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கிருஷ்ணாம் பாளையத்தை சேர்ந்த கணித ஆசிரியர் ஐசக் தேவகுமார். ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஐசக் என்பவரின் மகனான இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சீனாவில் உள்ள அரசு பள்ளியில் முதுநிலை கணித ஆசிரியராக பணியாற்றுகிறார்.

இவர் 2016ஆம் ஆண்டு முதல் முறையாக சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். 2018ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதையும் இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.

மாணவர்களுக்கு எளிமையாகவும் விரைவாகவும் கணிதத்தைக் கற்பிப்பதில் சிறந்து விளங்கியதற்காக தேவகுமார் இந்த விருதைப் பெற்றுள்ளார். அவர், "எனக்கு இந்த கற்பிக்கும் திறனை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி