ஆப்நகரம்

வித்தியாசமான செல்பி எடுக்க ஆசைப்பட்டு 800 அடி பள்ளத்தில் விழுந்த இந்திய ஜோடி

இவர்கள் பல இடங்களுக்குப் பயணித்து வித்தியாசமாக செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

Samayam Tamil 31 Oct 2018, 9:49 am
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் இருவர் 800 அடி உயர மலைச்சிகரத்தில் நன்றி செல்பி எடுக்கும்போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil 1540918019-moorthy


கேரள மாநிலம் செங்கனூரைச் சேர்ந்த விஷ்ணு விஸ்வநாத் மற்றும் மீனாட்சி மூர்த்தி ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இவர்கள் பல இடங்களுக்குப் பயணித்து வித்தியாசமாக செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இருவரும் கலிபோர்னியாவில் உள்ள யோசமிட்டி தேசியப் பூங்காவிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள டாஃப்ட் பாயிண்ட் (Taft Point) என்ற இடத்தில் செல்பி எடுத்த அவர்கள் கால் தவறி 800 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
பூங்காவின் பல பகுதிகளை டாஃப்ட் பாயிண்டில் நின்று பார்க்கலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து போட்டோ எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்திய தம்பதி தவறி விழுந்து உயிரிழந்தது எப்படி என அந்நாட்டுப் போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி