பாகிஸ்தானில் பல துறைகளில் பெண்கள் நியமிக்கப்படுவது பெரிதும் அரிதான விஷயம்.இந்நிலையில் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானில் ஒரு இந்து பெண் டிஎஸ்பி ஆக பதவி ஏற்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் ஜாகோபாத் என்ற இடத்தில் பிறந்தவர் மனிஷா ரூபேட்டா.
இதே போன்று மனிஷாவும் மருத்துவம் படிப்பதற்காக நுழைவு தேர்வு எழுதியுள்ளார். ஆனால் 1 மதிப்பெண் குறைந்ததால் மனிஷாவுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. போலீஸ் துறையில் உயர் பதவிக்கான தேர்வை எழுதி அவர் 468 பேரில் 16-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.
இருந்த போதிலும் மனம் தளராத மனிஷா, காவல்துறையை தேர்வு செய்து உயர் பதவிக்கான தேர்வை எழுதினார். இதன் காரணமாக சிந்து மாகாணத்தின் துணை போலீஸ் சூப்பிரண்டாக அவர் தேர்வாகியுள்ளார். இவர் தற்போது பயிற்சியில் இருக்கிறார். மேலும் பாகிஸ்தான் நாட்டில் ஒரு இந்து பெண் டிஎஸ்பி ஆக பதவி ஏற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.