ஆப்நகரம்

பிரதமர் மோடிக்கு செராவீக் விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு CERAWeek உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படவுள்ளது

Samayam Tamil 28 Feb 2021, 10:44 pm
அமெரிக்காவில் செராவீக் (CERAWeek) எனப்படும் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில், ஆற்றல் துறையை சேர்ந்த தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உலக தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு உரையாற்றுவர்.
Samayam Tamil பிரதமர் மோடி
பிரதமர் மோடி


அந்த வகையில், நடப்பாண்டிற்கான மாநாடு வருகிற மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடிக்கு CERAWeek உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கி கவுரவிக்கப்படவுள்ளது.

ஆற்றல், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கியதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அதில் உரையாற்றவும் உள்ளார்.

பிரதமர் மோடி தவிர, பருவநிலைக்கான அமெரிக்காவின் சிறப்பு துாதர் ஜான் கெர்ரி, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரான பில் கேட்ஸ், சவுதி அராம்கோ நிறுவனத்தின் தலைவர் அமின் நாசர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

அரபு வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்தியா வந்தால் இதெல்லாம் செய்யணும்!
உலகின் எதிர்கால எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய நிலையான வளர்ச்சியில் இந்தியாவின் பங்கை விரிவுபடுத்தியதற்காக CERAWeek Global Energy and Environment Leadership விருதை பிரதமர் மோடிக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று மாநாட்டுத் தலைவர் டேனியல் யெர்கின் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி