ஆப்நகரம்

நியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்திய வம்சாவளி பெண்; குவிகிறது பாராட்டு!

பிரதமர் தனது அமைச்சரவை மாற்றத்தில் இந்திய வம்சாவளி பெண்ணிற்கும் வாய்ப்பு தந்துள்ளார்.

Samayam Tamil 2 Nov 2020, 3:56 pm
நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அதிபர் அர்டர்ன், திறன் வாய்ந்த புதிய நபர்களுக்கு வாய்ப்பளித்துள்ளேன். இவர்கள் முதல் முறையாக இந்த துறைகளை கையாளப் போகிறார்கள். இதன்மூலம் அனைத்து தரப்பினருக்கும் சம வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்துள்ளேன். நாம் முதலில் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால் நமது நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுக்க வேண்டியது.
Samayam Tamil priyanca radhakrishnan


அமைச்சர்கள் சரியாக வேலை செய்யாவிடில், அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் இந்திய வம்சாவளி பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன். இவர் சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர். இவரது பூர்வீகம் கொச்சி அடுத்துள்ள பரவூர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தாத்தா ஒரு மருத்துவர். அதேசமயம் கம்யூனிஸ்ட் ஆகவும் இருந்திருக்கிறார். 41 வயதாகும் பிரியங்கா, தற்போது ஆக்லாந்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் வழக்கறினராக குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்காக போராடியவர்.

ஏழைகளுக்கு இலவச உணவு; ஆஸ்திரேலியாவில் அசத்தும் இந்திய வம்சாவளி செஃப்!

கடந்த 2017ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு இனச் சமூக நலத்துறை அமைச்சரின் நாடாளுமன்ற தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சமூக மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் நியூசிலாந்தில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த முதல் அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அடுத்த செய்தி