ஆப்நகரம்

சிங்கப்பூர் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; வாரி வழங்கிய வேலைவாய்ப்பு முகாம்!

கொரோனாவால் வேலையிழந்த பலருக்கும் வாழ்வளிக்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Samayam Tamil 13 Oct 2020, 2:49 pm
சிங்கப்பூரில் சிண்டா என்ற சுய உதவிக் குழு செயல்பட்டு வருகிறது. இது சிங்கப்பூர் இந்தியர்களுக்கான மேம்பாட்டு சங்கமாகும். அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் கல்வி மற்றும் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் இளைஞர்கள் மேம்பாடு, குடும்பம் மற்றும் குழந்தைகள் நலன் ஆகியவற்றிலும் அக்கறை கொண்டு செயல்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு முகாமிற்கு சிண்டா ஏற்பாடு செய்திருந்தது.
Samayam Tamil SINDA job Fair


இதில் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கம், சிங்கப்பூர் இந்திய உணவகச் சங்கத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இவர்கள் முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளை நடத்தினர். மேலும் வேலை தேடும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இதற்காக Skills Ambassadors என்ற பெயரில் தூதர்களும் பங்கேற்றிருந்தனர். சிங்கப்பூரில் கொரோனா தொற்று காரணமாக பலரும் வேலையிழந்துள்ளனர். இதனால் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி பெரும் சிரமத்தைச் சந்தித்து வந்தனர்.

இந்த சூழலில் சிண்டாவின் வேலைவாய்ப்பு பலருக்கும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தது. இதில் ஏராளமானோர் வேலை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி