ஆப்நகரம்

சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

சிங்கை வாழ் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியே செல்வதற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Oct 2020, 12:16 pm

சிங்கப்பூர் சிறிய தீவு நாடாக இருந்தாலும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கியிருக்கிறது. சிங்கப்பூரில் பாரம்பரியமாகவே ஏராளமான தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். முக்கியமாக, தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் ஏராளமாக வேலைசெய்து வருகின்றனர்.
Samayam Tamil Singapore


கொரோனா பாதிப்பால் சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியே நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களிலேயே பல மாதங்களாக அடைந்துகிடக்கின்றனர். வேலைக்காகவும், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே தொழிலாளர்கள் வெளியே போக அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்கள் நடமாடுவதற்கு சிங்கப்பூர் அரசு கட்டுப்பாடுகளை லேசாக தளர்த்தியுள்ளது. இதன்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள் அருகாமையில் உள்ள உணவகங்கள், சிறு வணிக நிலையங்கள் (mini marts) மற்றும் குறிப்பிட்ட சில பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

NRI பாஸ்போர்ட்டுக்கு இனி இது கட்டாயம்!

இதுகுறித்து சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்கள் வெளியே செல்வதற்கு முன் ஸ்மார்ட்போன் மூலம் அட்வான்ஸாக முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கு தனி பாஸ் வழங்கப்படும். பாஸை காட்டியபிறகே தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

ஏற்கெனவே 30,000 தொழிலாளர்கள் முன்பதிவு செய்து பாஸ் வாங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அரசு இந்த தளர்வை அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி