ஆப்நகரம்

இஷ்டத்துக்கு சம்பளத்தை குறைக்கலாம்: சிங்கப்பூர் அனுமதி!

வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதற்காக ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க சிங்கப்பூர் அரசு அனுமதியளித்துள்ளது.

Samayam Tamil 16 Oct 2020, 5:42 pm

கொரோனா வைரஸால் நோய் தொற்று, உயிர்பலிகள், சுகாதார கேடுகள், பொதுமுடக்கம் என பல பிரச்சினைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, பொருளாதார சரிவு, பண நெருக்கடி, வேலையிழப்பு, தொழிலில் நஷ்டம் என நிதி சார்ந்த பிரச்சினைகள் வாட்டி வதைக்கின்றன.
Samayam Tamil Singapore


இந்த வகையில் சிங்கப்பூர் பொருளாதாரமும் கொரோனா பொதுமுடக்கத்தால் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் ஏராளமானோர் வேலைகளை இழந்துள்ளனர். அண்மையில் பல ஊழியர்கள் சிங்கப்பூரை விட்டு சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர்கள் ஏராளம். இந்நிலையில், வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதற்காக ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க சிங்கப்பூர் அரசு அனுமதியளித்துள்ளது.

சிங்கப்பூர் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; வாரி வழங்கிய வேலைவாய்ப்பு முகாம்!

அதாவது, வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதற்காக ஊழியர்களின் சம்பளத்தை தற்காலிகமாக குறைக்க சிங்கப்பூர் தேசிய ஊதிய ஆணையம் அனுமதியளித்துள்ளது. எனினும், சம்பளத்தை குறைப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் அனுமதி பெற வேண்டும்.

எவ்வளவு சம்பளத்தை குறைக்கலாம் என தேசிய ஊதிய ஆணையம் வரம்புகளை நிர்ணயிக்கவில்லை. பழைய சம்பளம் எப்போது கொடுக்கப்படும் என்ற தகவலையும் ஊழியரிடம் தெரிவிக்க வேண்டும். இதுமட்டுமல்ல, நிறுவனத்தின் தொழில் முன்னேறும்போது பழைய சம்பளத்துக்கு மாறிவிட வேண்டுமென ஊதிய ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அமலில் இருக்கும் என்று தேசிய ஊதிய ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி