ஆப்நகரம்

தமிழக ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: சிங்கப்பூர் அரசு அறிவிப்பு!

வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பிற்காக கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 9 Oct 2020, 5:30 pm

சிங்கப்பூரில் ஏராளமான வெளிநாட்டு ஊழியர்கள் வேலைசெய்து வருகின்றனர். அதிலும், தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் சிங்கப்பூரில் வேலைசெய்து வருகின்றனர். முக்கியமாக, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த தமிழக மக்கள் பல பேர் சிங்கப்பூரில் வேலை பெற்றுள்ளனர்.
Samayam Tamil Singapore


கொரோனாவால் சிங்கப்பூர் திக்குமுக்காடி வருகிறது. கொரோனா பாதிப்பால் சிங்கப்பூர் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமெல்லாமல் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். வெளிநாட்டு ஊழியர்கள் ஏராளமானோர் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளதால் சிங்கப்பூர் மக்கள் தொகை குறைந்துள்ளதாக அண்மையில் அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டிருந்தது.

குழந்தை உட்பட தமிழ் குடும்பமே பலி: லண்டனில் அதிர்ச்சி சம்பவம்!

இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்குள்ளேயே பரிசோதனை வசதிகள், வட்டார பரிசோதனை மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் 35,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் 25 முதல் 30 கூடுதல் பரிசோதனை மையங்களை நிறுவ சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.

நோய் தொற்றை கண்டறிவதற்காக, விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அடுத்த செய்தி