ஆப்நகரம்

அர்மீனியா உடன் வெடித்த போர்; அஜர்பைஜான் தமிழர்கள் எப்படி இருக்கின்றனர்?

அஜர்பைஜானில் போர் மூண்டுள்ளதால் அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 8 Oct 2020, 11:14 am
ஆசியா, ஐரோப்பா என இரண்டு கண்டங்களிலும் பரவி இருக்கும் நாடு அஜர்பைஜான். இது சோவியத் குடியரசில் இருந்து பிரிந்து தனி நாடாக மாறியது. இதற்கு அருகிலுள்ள நாடு அர்மீனியா. இந்த இருநாடுகளுக்கும் இடையே நாகோர்னோ - காராபாக் என்ற மலைப்பகுதி அமைந்துள்ளது. இதனை அர்மீனிய மக்கள் குழுவினர் தன்னாட்சி அரசாக அறிவித்து நிர்வகித்து வருகின்றனர். ஆனால் சட்டரீதியாக அஜர்பைஜான் நாட்டிற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
Samayam Tamil Azerbaijan War


இதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மலைப்பகுதியை மையமாக வைத்து மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த வாரம் இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. மாறி, மாறி ஆயுதங்களைக் கொண்டு தாக்கி வருகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு மாநில மக்கள் அஜர்பைஜானில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அதில் தமிழர்கள், மலையாளிகள் உள்ளிட்டோர் அடங்குவர். அந்நாட்டில் போர் மூண்டுள்ளதால் தமிழர்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

குடும்ப விழாவில் புகுந்த கொரோனா - ஜெர்மன் தமிழர்கள் ஷாக்!

இதுபற்றி அந்நாட்டின் பக்கூ நகரில் வசிக்கும் தமிழர் ஒருவர் தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு தகவல் அளித்துள்ளார். அவர் கூறுகையில், பக்கூ நகரில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வந்தோம்.

கொரோனா தொற்று பரவத் தொடங்கியதால் 50 பேர் இங்கிருந்து வெளியேறி விட்டனர். தற்போது சுமார் 70 பேர் மட்டும் வசித்து வருகின்றோம். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.

போர் காரணமாக தமிழர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களுக்கும், அஜர்பைஜான் தமிழர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

அடுத்த செய்தி