ஆப்நகரம்

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு சிக்கல்: மத்திய அரசுக்கு கடிதம்!

அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதை எளிதாக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து சமூக ஆர்வலர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்

Samayam Tamil 6 Dec 2020, 4:39 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களை மீட்கும் நடவடிகையாக, வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் நடவடிக்கையை இந்தியா செயல்படுத்தியது. இத்திட்டம் கடந்த மே மாதம் 6ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியை ஏர் இந்தியா விமான நிறுவனம் மேற்கொண்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதேசமயம், கடந்த மே மாதம் 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களில் சர்வதேச விமானப் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த விமானங்களில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நாடு திரும்புவதில் சிக்கல்கள் இருப்பதாக கூறி அதனை எளிதாக்குமாறு மத்திய அரசுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

ஜெய்ப்பூர் ஃபுட் அமெரிக்கா நிறுவனத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான பிரேம் பண்டாரி மத்திய அரசுக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் எதிர்கொள்ளும் கஷ்டங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

H-1B Visa: தடைகளை ரத்து செய்த நீதிமன்றம்: ஹேப்பி நியூஸ்!

விசா தகுதி மற்றும் தேவையான பயண முறைகள் குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கப்படும் விஷயங்களில் கூடுதல் தெளிவு வேண்டும். இந்திய பாஸ்போர்ட்டு வைத்திருப்போர், இந்திய வம்சாவளி அட்டைதாரர்கள், வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமையாளார்கள் உள்ளிட்டவர்கள் நாடு திரும்ப அவசர விசாவுக்காக விண்ணப்பிக்காமல், முடிவடையாத விசாக்களுடன் பயணிக்க அனுமதிக்க வேண்டும். விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் விசாக்களை சரிபார்த்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், புறப்பாட்டின்போது வழங்கும் அவசர விசா அல்லது இ-விசா முறையை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி