ஆப்நகரம்

அமெரிக்காவில் மற்றொரு இந்தியர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் படித்து வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Samayam Tamil 8 Jul 2018, 9:29 am
அமெரிக்காவில் படித்து வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Samayam Tamil FB Live Poll


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சரத் கொப்பு. கம்யூட்டர் என்ஜினீயரான இவருக்கு வயது 26. ஹைதராபாத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். பின், மேற்படிப்புக்காக கடந்த ஜனவரியில் அமெரிக்கா சென்றார். அங்கு கன்சாஸில் உள்ள மிசெளரி பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி (நேற்று முன்தினம்) கன்சாஸ் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்ற அவர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். பலத்த காயம் அடைந்த சரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடலில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளது. கொள்ளையடிப்பதற்காக சுடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரைக் கொன்ற நபரின் அடையாளம் சிசிடிவி காட்சியில் தெரியவந்துள்ளது. குற்றவாளியை பற்றிய தகவல் சொல்பவருக்கு 10,000 டாலர் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சரத்தின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வர உதவுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கன்சாஸ் நகரில் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற ஹைதராபாத் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே பகுதியில் மீண்டும் மற்றொரு இந்தியர் கொல்லப்பட்டிருக்கிறார்.

அடுத்த செய்தி