ஆப்நகரம்

குழந்தை உட்பட தமிழ் குடும்பமே பலி: லண்டனில் அதிர்ச்சி சம்பவம்!

லண்டனில் மூன்று வயது குழந்தை உள்பட ஒரு தமிழ் குடும்பமே வீட்டில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Oct 2020, 6:02 pm

லண்டன்வாழ் தமிழ் குடும்பத்தை சேர்ந்த குக ராஜ் சிதம்பரநாதன் (42), மனைவி பூர்ணா காமேஷ்வரி சிவராஜ் (36), மகன் கைலாஷ் குக ராஜ் (3) ஆகிய மூவரும் வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது உறவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil பூர்ணா காமேஷ்வரி, கைலாஷ்


பூர்ணாவையும், அவரது மகன் கைலாஷையும் கடைசியாக செப்டம்பர் 21ஆம் தேதியன்று பார்த்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். நீண்ட நாட்களாக தொடர்பு இல்லை என்பதால் உறவினர் கொடுத்த தகவலின்பேரில் பூர்ணாவின் குடும்பத்தை போலீசார் தொடர்புகொண்டுள்ளனர்.

சவுதியில் சிக்கியிருந்த இந்தியர்கள் தாயகம் திரும்பினர் - அடுத்த ஃப்ளைட் எப்போ?

தொடர் முயற்சிக்கு பிறகும் பதில் இல்லாததால் வீட்டுக்குள் போலீசார் நுழைந்தனர். அப்போது பூர்ணா, மகன் கைலாஷ் ஆகியோரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், பூர்ணாவின் கணவர் குக ராஜ் சிதம்பரநாதனின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.

குக ராஜ் சிதம்பரநாதனின் உடலில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டுக்குள் போலீசார் நுழைய முயற்சித்தபோது குக ராஜ் தன்னை தானே கத்தியால் கடுமையாக தாக்கிக்கொண்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

குக ராஜ் தனது மனைவியையும், மகனையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணைதொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி