ஆப்நகரம்

NRI தமிழர்களுக்கு இணையதள சேவை.. தமிழக அரசு அறிமுகம்!

என்.ஆர்.ஐ. தமிழர்களுக்கு புதிய இணையதள சேவையை தொடங்கிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

Samayam Tamil 7 Dec 2021, 7:58 pm
புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசின் “மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர் நல ஆணையரகத்தின்” இணையதள சேவையை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இன்று வைத்தார்
Samayam Tamil அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் அதிகாரிகள்


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புலம்பெயர்ந்த தமிழர்களின் நல் வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்த நிலையில், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பினை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 12, அன்று “புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக” கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் வரும் 12.01.2022 மற்றும் 13.01.2022, இரண்டு நாட்கள் “புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள்” சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்யும் பொருட்டும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்கள், அவர்களது பிரச்சனைகளுக்கான தீர்வுகள் போன்றவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டு “மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர் நல ஆணையரகத்தின்” இணையதளத்தை (https://nrtamils.tn.gov.in) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று (07.12.2021) சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

ஒமைக்ரான் வைரஸ்: சர்வதேச விமான சேவைக்கு மீண்டும் தடை!
உடன் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர் நல ஆணையரகத்தின் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஐஏஎஸ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ஐஏஎஸ் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

அடுத்த செய்தி