ஆப்நகரம்

பட்ஜெட்டில் NRI நபர்களுக்கு சூப்பர் சலுகைகள்.. அந்த தலைவலியில் இருந்து விடுதலை!

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சில அறிவிப்புகளோடு, நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Feb 2021, 8:27 pm
மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (NRI) நிவாரணம் அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil NRI Representational image


வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு வரும்போது, அவர்கள் ரிட்டயர்மெண்ட் அக்கவுண்டில் பெற்ற வருமானம் தொடர்பான சிக்கல்கள் எழுகின்றன. வரி விதிப்பு கால மாற்றங்களின் விளைவாகவே இந்த சிக்கல்கள் உருவாகின்றன.

மேலும், வெளிநாடுகளில் இந்திய வரிக்கான கிரெடிட் பெறுவதிலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சிக்கல்களை சந்திப்பதாகவும், இதனால் இருமுறை வரி விதிப்பு ஏற்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

குடியுரிமை வழங்கும் UAE.. வரலாற்றில் முதல்முறையாக.. ஹேப்பி நியூஸ்!
எனவே, இருமுறை வரி விதிப்பில் இருந்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு விடுதலை அளிப்பதற்காக புதிய விதிமுறைகளை முன்மொழிவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் தொழில் செய்வதை எளிமையாக்கும் வகையில், ஒரு நபர் நிறுவனங்களை (one person companies) இந்தியாவில் அமைக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஒரு நபர் நிறுவனங்களை அனுமதிப்பதற்காக சட்டவிதிகளில் கொண்டுவரப்படவுள்ள தளர்வுகளால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி