ஆப்நகரம்

ஏறி அடிக்கும் கொரோனா; ஒருநாளில் இத்தனை பலி?

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1942 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 13 May 2021, 1:08 pm
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் இறந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. இது தமிழகம் மற்றும் புதுச்சேரியையும் விட்டு வைக்கவில்லை.
Samayam Tamil கொரோனா பாதிப்பு விபரம்
கொரோனா பாதிப்பு விபரம்


இதனால் கடந்த சில தினங்களாக கொரோனா நோயின் தாக்கத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதிக்கப்படுவோர் மற்றும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் கூடி வருகிறது.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 9,292 பேருக்கு பரிசோதனை செய்ததில் கடந்த 24 மணி நேரத்தில் 1,942 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு 3 நாளில் 39 பேர் பலி; அதுவும் ஒரே அரசு மருத்துவமனையில்!

இதில் புதுச்சேரியில் 1,550 நபர்கள், காரைக்காலில் 227 நபர்கள், ஏனாமில் 123 நபர்கள், மாஹேவில் 42 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 16,568 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தற்போது 61,336 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் புதுச்சேரியில் 18 பேரும், காரைக்காலில் 3 பேர் , ஏனாமில் 2 பேர், மாஹேவில் ஒருவர் என 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதல்வருக்கு கடிதம் எழுதிய சிறுமி; அமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து!

இதையடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1069 ஆக உயர்ந்துள்ளது. இன்று சிகிச்சை பெற்று திரும்பியவர்களின் எண்ணிக்கை 912 ஆக உள்ளது. புதுச்சேரியில் இதுவரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 935ஆக உள்ளது.

அடுத்த செய்தி