ஆப்நகரம்

பதுங்கி பாயும் கொரோனா; புதிய உச்சத்தால் அச்சம்!

புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டு 2 வாரம் ஆகியும் இன்னமும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. அந்தவகையில் புதுச்சேரியில் இதுவரையிலும் இல்லாத வகையில் புதிய உச்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 32 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 1961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Samayam Tamil 16 May 2021, 1:41 pm
புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு போட்டு 2 வாரம் ஆகியும் இன்னமும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.
Samayam Tamil கொரோனா பாதிப்பு விபரம்
கொரோனா பாதிப்பு விபரம்


இதன் காரணமாக கொரோனா நோய் பெருந்தொற்றின் இரண்டாவது அலை புதுச்சேரி மாநிலத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது. உருமாறிய கொரோனா இரண்டாம் அலை மக்களை திணறடித்து வருகிறது.

இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு இரண்டாயிரத்தைத் தாண்டி சென்றது. இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் தினந்தோறும் 29-ஐ தாண்டி இருந்து வந்தது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டு 2 வாரம் ஆகியும் இன்னமும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் 9,446 பேருக்கு பரிசோதனை செய்ததில் கடந்த 24 மணி நேரத்தில் 1,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆளுநர் ஆய்வின் விளைவு பூஜ்ஜியம்; இப்படி யாராலும் கலாய்க்க முடியாது!

இதில் புதுச்சேரியில் 1,585 நபர்கள், காரைக்காலில் 255 நபர்கள், ஏனாமில் 111 நபர்கள், மாஹேவில் 10 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 17,666 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 65,689 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

‘டெட் பாடி’ எரிக்க டோக்கன் வாங்கனும்; கமிஷனர் தகவலால் கலங்கும் சென்னை!

புதுச்சேரியில், புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் புதுச்சேரியில் 25 பேரும், காரைக்காலில் 6 பேர், மாஹேவில் ஒருவர் என 32 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1151-ஆக உயர்ந்துள்ளது. இன்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,491 ஆக உள்ளது.

அடுத்த செய்தி